Friday, August 3, 2012

கற்பகவல்லி பாமாலை

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா [தேவி]
பற்பலரும் போற்றும் பதிம‌யிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட [கற்பகவல்லி நின்

நீயிந்த வேளைதன்னில் சேயன் என்னை மறந்தாய்
நாநினிலத்தில் நாடுதல் யாரிடமோ
எனிந்த மெளனம் அம்மா ஏழை எனக்கருள‌
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா [கற்பகவல்லி நின்

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி வைத்திடும் நாயகியே [நித்ய]
கல்யாணியே கபாலி காதல் புரியும் [அந்த]
உல்லாசியே உமா உனை நம்பினேன் அம்மா [கற்பகவல்லி நின்

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகேஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே [இந்த]
லோகேஸ்வரி நீயே உலகினில் துணை அம்மா [கற்பகவல்லி நின்

அஞ்சன மைய்யிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா [கற்பகவல்லி நின்

No comments:

Post a Comment