Saturday, September 29, 2012

ப்ரபோ கணபதே

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே கணபதே கணபதே

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரணடைந்தோமே உந்தன்
சன்னதி சரணடைந்தோமே
சாந்த சித்த‌ செளபாக்கியம் யாவையும்
சாந்த சித்த‌ செளபாக்கியம் யாவையும்
தந்தருள் சத்குரு நீயே
தந்தருள் சத்குரு நீயே

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே கணபதே கணபதே

ஆதிமூல கணநாத கஜானன‌
அற்புத தவன ஸ்வரூபா
அற்புத தவன ஸ்வரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக‌
தேவ தேவ ஜெய விஜய விநாயக‌
சின்மய பரசிவ தீபா குரு
சின்மய பரசிவ தீபா

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே கணபதே கணபதே

தேடித்தேடி எங்கும் ஓடுகின்றார் உன்னைத்
தேடி கண்டுகொள்ளலாமே உள்ளே
தேடி கண்டுகொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் துதி செய்ய‌
கோடி கோடி மத யானைகள் துதி செய்ய‌
குன்றென விளங்கும் பெம்மானே குணக்
குன்றென விளங்கும் பெம்மானே

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே கணபதே கணபதே

Saturday, August 4, 2012

ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை

ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான சத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்

காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தர நாற்ற நலம்
பூக்கும் நகையால் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !

வைரம்
கற்றும் தெளியார் காடேக்கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நினையேன்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒலிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவர்றேளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

முத்து
முத்தே வரும் முத்தொழிலார் றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாதவரம் தரவே வருவாய்
மத்தேறு ததிகினை வாழ்வுடையேன்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

பவளம்
அந்தி மயங்கிய வானவிதானம்
அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் மொழிபாரோர்
தேம்பொழிலாமிது செய்தவலாரோ
எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தால்
மந்திர வேதமயப்பொருள் ஆனால்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

மாணிக்கம்
காணக்கிடையாக் கதியானவளே
கருதக்கிடையா கலையானவளே
பூணக்கிடையா பொளிவானவளே
புனையக்கிடையா புதுமைதவளே
நாணித்திருநாமம் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்கவொளி கதிரே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
ஸுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
ஸ்ருதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவேன் அடியவற்குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வறனவா நிதியே சரணம் சரணம்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

கோமேதகம்
பூமேவியனான் புரியும் செயல்கள்
போன்றாப்பயனும் குன்றாவரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி என
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வா நிலமே
குழல்வாய் மொழியே வருவாய் வருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

பத்மராகம்
ரஞ்சனி நந்தனை அங்கனி பதும
ராக விகாசினி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்திர கலாதரி ராணி
அஞ்சனா மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள‌ மேரு ஸ்ருங்க நிவாரிணி
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

வைடூர்யம்


வலையோத்தவினை கலையோத்த மனம்
மருளப் பறையா ரொளியோத்தவிதால்
நிலையர்ரோளிஎன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையர்ரசைவர் ரணிபூதிபெரும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலைத்துவஜன் மகளே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

இப்பாடலின் பலன்

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புதசக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வாரவரே!!

Friday, August 3, 2012

கற்பகவல்லி பாமாலை

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா [தேவி]
பற்பலரும் போற்றும் பதிம‌யிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட [கற்பகவல்லி நின்

நீயிந்த வேளைதன்னில் சேயன் என்னை மறந்தாய்
நாநினிலத்தில் நாடுதல் யாரிடமோ
எனிந்த மெளனம் அம்மா ஏழை எனக்கருள‌
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா [கற்பகவல்லி நின்

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி வைத்திடும் நாயகியே [நித்ய]
கல்யாணியே கபாலி காதல் புரியும் [அந்த]
உல்லாசியே உமா உனை நம்பினேன் அம்மா [கற்பகவல்லி நின்

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகேஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே [இந்த]
லோகேஸ்வரி நீயே உலகினில் துணை அம்மா [கற்பகவல்லி நின்

அஞ்சன மைய்யிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா [கற்பகவல்லி நின்

Thursday, January 5, 2012

அகத்தியர் பாடல்

ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது
ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது
விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது
எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

உற்றவர் எனைப் பெற்றவர் மற்றவர் என் சுற்றமும்
உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றம் ஓவென்று நின்றழுதிடும் போது
உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

என் பொருள் என் மனை என்பது இனி இல்லை என் பொருள் என் மனை என்பதெல்லாம்
இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா